மது விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் மீது வழக்கு

84பார்த்தது
மது விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஊமை உடையனுர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சாமிநாதன் (40). இவர் தனது கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மதுவிற்ற சாமிநாதன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி