பில்லூரில் 73 ஆம் ஆண்டு சிறுவர் கபடி போட்டி

60பார்த்தது
பில்லூரில் 73 ஆம் ஆண்டு சிறுவர் கபடி போட்டி
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பில்லூரில் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாநில அளவிலான 73ஆம் ஆண்டு தொடர் சிறுவர் கபாடி போட்டி நடந்தது. 2 நாள் நடந்த கபாடி போட்டிக்கு முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தோகைமலை மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் பில்லூர் ராகவன் தலைமை வகித்தார். பில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பழனி, ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகராணி நாகராஜ், பில்லூர் ஊர் கவுண்டர் கோபாலாகிருஷ்ணன், தோகைமலை மேற்கு ஒன்றிய அதிமுக அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் (எ) முருகானந்தம் மற்றும் விழா கமிட்டியாளர்கள் இளைஞர் அமைப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 2 நாட்களாக நடைபெற்ற போட்டியில் விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற, கரூர் மாவட்டம் பெரியவீட்டுக்காரன்பட்டி செம்மீன் கபாடிக் குழு அணியினரும், கரூர் மாவட்டம் பில்லூர் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் கபாடி அணியும் எதிர் கொண்டு விளையாடினர். பரபரப்பாக ஆடிய இறுதி ஆட்டத்தின் முடிவில் (16) புள்ளிகளை பெற்று கரூர் மாவட்டம் பெரியவீட்டுக்காரன்பட்டி செம்மீன் கபாடிக் குழு அணியினர் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரத்து 24 ரொக்கப்பணம் மற்றும் 5 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையினை தட்டிச்சென்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி