கரூர்: விசிக சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம்

78பார்த்தது
கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் சேங்கல் சமுதாய கூடத்தில் ஒன்றிய செயற்குழு கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி (எ) வன்னியரசு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் செயற்குழு கூட்டத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி புரட்சிகாரர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது, சேங்கலில் உள்ள சமுதாயக்கூடத்தை பராமரிப்பு செய்ய கோரி வலியுறுத்துவது, ஊராட்சி பகுதிகளில் நடைபெறக்கூடிய தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பங்கேற்க வைப்பது, திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரத்தில் கபடி வீரர் தேவேந்திரராஜ் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் முடிவெடுக்கப்பட்டது. இதில் கிளைச் செயலாளர் பார்த்திபன், சேங்கல் சுபாஷ், தொகுதி துணை செயலாளர் சரவணன், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் சரத்குமார், கார்த்தீபன், சூர்யா, பெருமாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி