செல்லாண்டிபட்டியில் டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஜல்லிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்.
இவர் ஜூலை மூன்றாம் தேதி மாலை 4: 30 மணியளவில் கரூர் - பாளையம் சாலையில் அவரது டூவீலரில் சென்றார்.
இவரது வாகனம் செல்லாண்டிபட்டி முனியப்பன் கோவில் அருகே வந்தபோது அதே சாலையில் பின்னால் வந்த, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ராமபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் ஓட்டி வந்த டூ வீலர் பரமசிவம் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த பரமசிவத்தை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக பரமசிவம் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட வெள்ளியனை காவல்துறையினர் வினோத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.