கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா செம்பியநத்தம் அடுத்த சின்ன முத்தம்பாடியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் இளவரசன் என்கிற ராஜா 37. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. மனைவி அனுசியா அவருடன் வாழாமல் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த நான்காம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணவில்லை. இது குறித்து அவரின் தாயார் பாப்பு புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.