கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா லாலாபேட்டை அடுத்த மேல விட்டு கட்டியை சேர்ந்தவர் சரவணன் 32. கூலித்தொழிலாளியான இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.