கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா ரெங்கநாதபுரம் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ மனைவி பூமா (42). இவர் வீரராக்கியம் பிரிவு ரோடு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த மாயனூர் போலீசார் மது விற்ற பூமா மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.