கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன் (45). இவர் லாலாபேட்டை கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் லாட்டரி விற்ற மணிகண்டன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.