கரூர்: ஆம்னி கார் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

69பார்த்தது
கரூர் மாவட்டம், காக்காவாடி கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சடையப்பன் கவுண்டன் புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 1 மணி அளவில் ஆம்னி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பெண்கள், 1 ஆண், 1 பையன், படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த ஹைவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்த போது, ஆம்னி கார் கரூர் நோக்கி சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சடையப்பன் கவுண்டன் புதூர் பிரிவு அருகில் உள்ள தடுப்பு கம்பின் மீது மோதி உருண்டோடி பாலத்தின் அடியில் கிடந்தது. எனவும், விபத்துக்குள்ளானவர்கள் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி