வெள்ளியணை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை

51பார்த்தது
வெள்ளியணை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை
கரூர் வெள்ளியணை அருகே உள்ள ஜல்லிப்பட்டி குடி தெருவை சேர்ந்த பாலமுத்து மகன் பெரியசாமி வயது 71, ஓராண்டுக்கு முன்னர் பெரியசாமியின் மனைவி இறந்த துக்கத்தில், மனவரைத்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு பெரியசாமி தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார் அவரை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி உயிரிழந்தார்.

இது தொடர்பாக பெரியசாமியின் மகன் சந்திரசேகரன் வயது 43 என்பவர் வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து டிசம்பர் 31ஆம் தேதி விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி