காந்திகிராமம் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு ராமானுஜர் நகர் வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிபாரதி வயது 35.
இவர் மே 7ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் காந்திகிராமம் பகுதியில் செயல்படும் பிரபல பிரியாணி கடை அருகே வந்தபோது,
இவருக்கு பின்னால் தாந்தோணி மலை, காளியப்பனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது 22 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார்,
ரவிபாரதி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த ரவி பாரதியின் மாமனார் சுந்தர்ராஜ் வயது 63 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தினேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.