மேட்டுமகாதானபுரத்தில் விவசாய சங்க நிர்வாகி மீது தாக்குதல்

81பார்த்தது
மேட்டுமகாதானபுரத்தில் விவசாய சங்க நிர்வாகி மீது தாக்குதல்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே ஓமாந்தூரை சேர்ந்தவர் கண்ணதாசன் (60). இவர் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவராக உள்ளார். 

இவர் கடந்த 3 ஆம் தேதி மேட்டுமகாதானபுரம் மணி என்பவரின் டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மேட்டுமகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கண்ணதாசனை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி விஜயலட்சுமிக்கு நீ என்ன சப்போட்டா என கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் முருகன் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி