திம்மாச்சிபுரம் அருகே நடந்து சென்ற முதியவர் மீது பயணிகள் வேன் மோதி விபத்து.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, திம்மாச்சிபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமன் வயது 70.
இவர் மார்ச் 11ஆம் தேதி காலை 8 மணி அளவில், திருச்சி- கரூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திம்மாச்சிபுரம் பகுதிக்கு வந்த போது,
திருச்சி மாவட்டம், துறையூர், சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த ட்ராவலர் வேன் நடந்து சென்ற ராமன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் அறிந்த ராமனின் மனைவி பானுமதி வயது 60 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வேனை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஹரிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல்துறையினர்.