டூவீலரில் வாலிபர் வேகமாக சென்றதால் கீழேவிழுந்து விபத்து.

54பார்த்தது
ஜெகதாபி- டூவீலரில் வேகமாக சென்றதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தாதம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ வயது 40.

இவர் டிசம்பர் 23ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், வெள்ளியணையில் இருந்து ஜெகதாபி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் ஜெகதாபி பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகே சென்ற போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இளங்கோவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் அறிந்த இளங்கோவின் சகோதரர் பிரபாகரன் வயது 49 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விபத்து ஏற்படும் வகையில் டூவீலரை வேகமாக ஓட்டிய இளங்கோ மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி