காளியப்ப கவுண்டன் புதூரில் நின்றிருந்தவர் மீது டூ வீலர் மோதி விபத்து.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 73.
இவர் மே 8ஆம் தேதி இரவு 7: 45 மணி அளவில், காளியப்ப கவுண்டன் புதூரில் இருந்து உள்வீர்ராக்கியம் செல்லும் சாலையில் உள்ள பாலகட்டை அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது உப்பிடமங்கலம், காளியப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் வயது 65 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர்,
நின்றிருந்த மாரிமுத்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த மாரிமுத்துவின் பேரன் வீரமணிகண்டன் வயது 20 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கேசவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.