மாயனூர் கதவணையில் இருந்து 1, 67, 156 கன அடி நீர் வெளியேற்றம்

78பார்த்தது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக கர்நாடகா மாநிலங்களில் உள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து நீர் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அந்த தண்ணீரானது கடந்த 30ம் தேதி அதிகாலை மாயனூர் கதவணையை வந்தடைந்தது. படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1, 67, 156 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அந்த தண்ணீரில் 1, 65, 636 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கறை வாய்க்காலில் 700 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடியும், விவசாய பாசனத்திற்காக பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி