கரூர் - Karur

கரூர்: தைப்பூசதேர் திருவிழா துவக்கி வைத்த செந்தில் பாலாஜி

அருள்மிகு வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி தைப்பூச தேர் திருவிழா அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.  கரூர் அடுத்த வெண்ணைமலையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வந்த இந்த கோவிலில் இன்று தைப்பூச தேர் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில் கோவில் அறங்காவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  தேர் திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி வெண்ணைமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, தேரை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பயபக்தியுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர். மலைக்கோவிலை சுற்றியுள்ள தேர்வழி பாதையில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என கூவி கோஷம் எழுப்பி பரவசமடைந்தனர்.

வீடியோஸ்


கரூர்
மலையாள பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஆர்யா
Feb 11, 2025, 16:02 IST/

மலையாள பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஆர்யா

Feb 11, 2025, 16:02 IST
நடிகர் ஆர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் '2018' எனும் திரைப்படம் வெளியானது. இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆர்யா உடன் இவர் இணைந்திருப்பதாகவும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.