வெண்ணைமலை பெட்ரோல் பங்க் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
கரூர் மாவட்டம், வெண்ணமலை, பசுபதிபாளையம், பரணி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 32.
இவர் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 11: 30 மணி அளவில் கரூர்- வேலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது,
எதிர் திசையில் கரூர் வெண்ணைமலை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி வயது 68 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், மணிகண்டன் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.