கரூர் மாவட்டம், வெங்கமேடு, விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் குமார் (37). இவர் அண்மைக்காலமாக மது போதைக்கு அடிமையாகி இருந்தார். இதனால் கடந்த சில வருடங்களாக மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் மார்ச் 11ஆம் தேதி காலை 6 மணி அளவில் அவரது வீட்டின் அருகே நடந்து வந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் கார்த்திக் குமாரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
கார்த்திக்கின் மனைவி ஷகீன்பாபு (27) என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட வெங்கமேடு காவல்துறையினர், உயிரிழந்த கார்த்திக் குமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.