வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லையே! வாலிபர் தற்கொலை.

53பார்த்தது
காந்தி நகரில், வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லையே! வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

கரூர் மாவட்டம், சுக்காலியூர், காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி வயது 40. இவரது மனைவி மகேஸ்வரி வயது 39.

வெள்ளியங்கிரி கரூரை அடுத்த ஆத்தூரில் செயல்படும் BPCL பெட்ரோல் டெர்மினல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் விரத்தி அடைந்த வெள்ளியங்கிரி பிப்ரவரி 13ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5: 30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்று இருந்த மகேஸ்வரி வீடு திரும்பிய போது தனது கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த வெள்ளியங்கிரியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி