டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

60பார்த்தது
தீரன் சின்னமலை நகர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு, கொங்கு நகர் 8-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் மனோஜ் வயது 25.


இவர் மார்ச் 21ஆம் தேதி இரவு 10 மணி அளவில் வாங்க பாளையத்திலிருந்து ஓட்ட பிள்ளையார் கோவில் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் தீரன் சின்னமலை நகர் பிரிவு அருகே சென்றபோது,

எதிர் திசையில் கரூர் காதப்பாறை பகுதியைச் சேர்ந்த வீரா வயது 32 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், மனோஜ் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மனோஜை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் அறிந்த மனோஜின் தந்தை ராஜ்குமார் வயது 52 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வீரா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி