திருக்காம்புலியூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வையாபுரி நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் வயது 63.
இவர் டிசம்பர் 21ஆம் தேதி மதியம் 12: 00 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் திருக்காம்புலியூர், கரூர் காபி ஷாப் அருகே சென்று கொண்டிருந்தபோது,
எதிர் திசையில் கரூர், சுக்காலியூர் அருகே உள்ள பண்டுதகாரன் புதூரைச் சேர்ந்த ஸ்ரீதர் வயது 34 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நவநீதன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில், நவநீதனுக்கு இடது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்ச சம்பவம் தொடர்பாக நவநீதன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.