கரூர்-ஈரோடு சாலையில் டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம்.
கரூர் ஆண்டாங் கோவில்,
ராமாகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் வயது 26.
இவர் பிப்ரவரி 13ஆம் தேதி காலை 8: 30 மணி அளவில், கரூர்- ஈரோடு சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள தரணி பிரியாணி கடை அருகே சென்றபோது,
கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, பெரிய வள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி வயது 47 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், பாலமுருகன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில் பாலமுருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டு கரூர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அதே சமயம் ராமமூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக பாலமுருகன் அளித்த புகாரில் ராமமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.