மார்ச்28 பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம்-PRO

85பார்த்தது
கரூர் - புகலூர் ரயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட PRO அறிவித்துள்ளார்.

அதில் திருச்சிராப்பள்ளி ஜங்சனிலிருந்து காலை 07. 20 மணிக்கு புறப்படும் ரயில் எண். 56809 திருச்சிராப்பள்ளி-ஈரோடு பயணிகள் ரயில், மார்ச் 28ல் கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும்.   

இந்த ரயில் திருச்சிராப்பள்ளி ஜங்சனிலிருந்து கரூர் ஜங்ஷன்வரை மட்டுமே இயக்கப்படும். கரூர் ஜங்ஷனிலிருந்து ஈரோடு ஜங்ஷன்க்கு இயக்கப்படாது.

 
இதே போல ஈரோடு ஜங்ஷனிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16845 ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மார்ச் 28ல் கரூர் ஜங்ஷனி லிருந்து மதியம் 3. 05 மணிக்கு புறப்படும். ஈரோடு - கரூர் ரயில் இயக்கப்படாது.
அன்று கரூர் ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயங்கும்.


செங்கோட்டையிலிருந்து காலை 05. 10 மணிக்குப் புறப்படும் ரயில் எண். 16846 செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ், மார்ச் 28ல் கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும்.

 திருச்சிராப்பள்ளி ஜங்ஷனிலிருந்து பிற்பகல் 13. 00 மணிக்குப் புறப்படும் ரயில் எண். 16843 திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், மார்ச் 28ல் கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும்.  

புகளூரில் பணிகள் முடிந்ததும், கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக ரயில் இயக்கப்படும். என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி