திட்டத்தின் தன்மை கூட அறியாமல் பேசுபவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்- செந்தில் பாலாஜி.
திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விழா பொதுக்கூட்டம் கரூரை அடுத்த பசுபதிபாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,
காவிரிஆற்றின் குறுக்கே நெரூர்- உன்னியூர் இடையே பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் இந்த பணி நிறைவு பெற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் ஒரு சிலர் இந்தத் திட்டம் 1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது போல தகவல் தெரிவிக்கின்ற அவர்கள், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அந்த பணிகளை முடித்து அவர்கள் திறந்து வைத்திருக்கலாம்.
ஆனால், செய்யவில்லை.
தற்போது திமுக ஆட்சியில் இந்த நெரூர் - உன்னியூர் பாலத்தையும் விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்
எந்த திட்டங்களை செயல்படுத்த முயன்றாலும் அதற்கு நீதிமன்றம் சென்று தடைஆணை பெற்று அந்த பணிகளை தடை செய்வதே வாடிக்கையாக வைத்துள்ளனர் அவர்கள்.
அதனையும் மீறி சட்டப் போராட்டங்களை நடத்தி திறமையான வழக்கறிஞர்களை கொண்டு வாதாடி நீதிமன்றத்தில் வெற்றி பெற்று வளர்ச்சி திட்ட பணிகளை செய்ய வேண்டிய சூழல் இங்கே கரூர் மாவட்டத்தில் உள்ளது. அதனையும் மீறி செயல்படுத்தி வருகிறோம் என்றார்.