கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரூபாய் சுமார் 15 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு என். எஸ். கே நகர் பகுதியில் சுகாதார வளாகம் திறப்பு விழா, காமதேனு நகர் வழியாக மோகனூர் செல்லும் இணைப்பு சாலை திறப்பு விழா, காமராஜ் சாலையில் அங்கன்வாடி மையம், மழைநீர் வடிகால் அமைத்தல், நியாய விலை கடை திறப்பு விழா என 15 கோடியே 27 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான துவக்க விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சாரம் ஆயத் தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
வெங்கமேடு என். எஸ். கே நகர் பகுதியில், சுகாதார வளாகத்தை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பெண்கள், மாற்றுத்திறனாளி மாணவர் உட்பட பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.