தமிழ்நகர்-நடந்து சென்ற முதியவர்மீது டூவீலர் மோதி விபத்து.

80பார்த்தது
தமிழ் நகரில் நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை வயது 72.


இவர் மார்ச் 18 ஆம் தேதி இரவு 7: 15- மணி அளவில், அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது அருகில் உள்ள தமிழ் நகர் அருகே சென்ற போது, அதே சாலையில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி வயது 41 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற செல்லதுரை மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இதில் படுகாயம் அடைந்த செல்லதுரையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் அறிந்த செல்லதுரையின் பேரன் மதன்குமார் வயது 21 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அப்பாஸ் அலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி