மாணவர்கள் உயர் கல்வி அடிப்படையில் கற்றிருக்க வேண்டும் - சைலேந்திரபாபு விளக்கம்.
கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் பிளஸ் டூ முடித்த மாணாக்கர்கள் உயர் கல்வி பயில தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற டிஐஜி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணாக்கர்களிடையே பேசும்போது, தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இன்ஜினியரிங் படிப்பை முடித்து இன்று சமூக முகநூல்
நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர் 1600 கோடி ரூபாய் ஊதியமாக பெறுகிறார்.
அவரை விட கூடுதலாக ஜெகதீஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அவர் 1800- கோடி ஊதியமாக பெற்று வருகிறார்.
இதற்கெல்லாம் அடிப்படை காரணமே அவர்கள் கல்லூரி படிப்பை முடித்தது தான். நான் கூட கல்லூரி படிப்பை முடித்ததால் தான் இத்தனை பெரிய உயர் பதவிக்கு வர முடிந்தது.
ஆகையால் பள்ளிப்படிப்பை முடித்த அனைத்து மாணாக்கர்களும் கட்டாயம் உயர் கல்வி பயில்வதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் தற்போது 52 சதவீதம் பேர் உயர் கல்வி பயின்று வருவதாகவும், எதிர்காலத்தில் இது 100 சதவீதமாக மாறும்போதுதான் நமது நாட்டின் தலையெழுத்தும் மாறும் என்றார்.