வெண்ணைமலை வீட்டில் பொருத்திருந்த ஏசியில் திடீர் தீ விபத்து. தீயை அணைத்த தீயணைப்பு நிலைய வீரர்கள்.
கரூரை அடுத்த வெண்ணெய் மலை அருகே உள்ள அன்பு நகர் 3வது கிராஸ் பகுதியில் வேணி, சதாசிவம் & இவர்களது மகன் ராஜசேகர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக வீட்டில் பொருத்தி இருந்த ஏசியில் இருந்து புகை வந்துள்ளது.
அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மேலும் வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டிற்கு உள்ளே பற்றி எரிந்த தீயை அனைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வெங்கமேடு காவல்துறையினர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.