தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் சார்பில் இன்று நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005- குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் மண்டல மேலாளர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதிக்குள் நடைபெற்ற இந்த பேரணியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.