கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவடியான் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி கலையரசி வயது 65. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு கடந்த ஏழு வருடங்களாக நீரிழிவு நோய் மற்றும் எலும்பில் பிரச்சினை ஏற்பட்டு அதற்காக தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆயினும் அவருக்கு குணமாகவில்லை. இதனால், விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த கலையரசி, மார்ச் 16ஆம் தேதி காலை 11 மணியளவில் இருந்து மதியம் 2 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இந்த சம்பவம் அறிந்த கலையரசின் கணவர் துரைராஜ் வயது 65 ஓய்வு பெற்ற ஆசிரியர், தனது மனைவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த துரைராஜ் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், உயிரிழந்த கலையரசியின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.