குடியிருப்புகளில் வெள்ள நீர் 2வது நாளாக சூழ்ந்துள்ளது

77பார்த்தது
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1, 50, 000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1, 28, 000 கன அடி தண்ணீர் கரூர் மாவட்டத்தை கடந்து சென்ற நிலையில் நள்ளிரவு முதல் நீர் வரத்து அதிகரித்து தற்போது 1, 67, 156 கன அடி தண்ணீர் சென்று வருகிறது.

காவிரி ஆற்றை ஒட்டிய தவிட்டுப்பாளையம் கிராமத்தில் தாழ்வாக உள்ள ஒரு சில குடியிருப்புகளில் 2-வது நாளாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அவர்களை வீட்டை விட்டு வருவாய் துறை அதிகாரிகள் வெளியேற்றி அருகில் உள்ள சமுதாய கூடங்களில் தங்க வைத்து.
அவர்களுக்கு குடிநீர், உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும் காவேரி ஆற்றின் கரையோரம் பகுதியில் தடுப்புகள் அமைத்து எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி