கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம்.

50பார்த்தது
கரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம்.

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமையில் நெற்றியில் நாமமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தேர்தல் கால வாக்குறுதி படி சிறப்பு ஓய்வூதியம் ரூபாய் 6, 750 வழங்கிட வேண்டும்.

தேர்தல் கால வாக்குறுதியாக பனிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

நீதியரசர் பட்டு தேவானந்த் அவர்களின் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி