மொச்சகொட்டபாளையம்- டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.

77பார்த்தது
மொச்சகொட்டபாளையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 34.


இவர் மார்ச் 15ஆம் தேதி இரவு 7 மணி அளவில், கோவை - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.


இவரது வாகனம் மொச்ச கொட்ட பாளையம் அருகே வந்த போது,

எதிர் திசையில் கரூர் மாவட்டம், பவித்திரம், சாலபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி வயது 58 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், விஜயகுமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் விஜயகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்த சம்பவம் அறிந்த விஜயகுமாரின் மனைவி சரண்யா வயது 28 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி