மண்மங்கலம்- டூவ
ீலர் மீது கன்டைனர் லாரி மோதி விபத்து. தந்தை, மகன் படுகாயம்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்
த் வயது 44.
இவரது மகன் கார்த்திகேயன் வயது 17.
இவர்கள் இருவரும் ஜூன் 6-ம் தேதி காலை 7: 45 மணி அளவில், கரூர்- சேலம் சாலை
யில் அ
வர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.
இவர்களது வாகனம் மண்மங்கலம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அதே சாலையில், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே
பழையஓட்டுபட்டி பகுதியைச் சேர்ந்த விமல் அரசு வயது 33 என்பவர், வேகமாக ஓட்டி வந்த கண்டைனர் லாரி, ஆனந்த் ஓட்டிய டூ வீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த ஆனந்த் மற்றும் அவரது மகன் கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விமலரசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.