அப்பிபாளையம்- மது போதையில் மொட்டை மாடியில் இருந்து செல்போனில் பேசிக்கொண்டே கீழே விழுந்தவர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், மண்மங்கலம், மேதி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சுரேஷ் வயது 37.
இவர் மார்ச் 17ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் அப்பி பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த சுரேஷ், மொட்டை மாடியில் இருந்து செல்போனில் பேசிக் கொண்டே இறங்கியவர் கவனக்குறைவாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சுரேஸ் சிகிச்சை பலனின்றி மார்ச் 20 ம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த சுரேஷின் தந்தை தங்கராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சுரேஷின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.