கரூர்: உலக தலைக் காயம் விழிப்புணர்வு தின விழிப்புணர்வு பேரணி

73பார்த்தது
கரூரில், உலக தலைக்காயம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் விபத்துக்கள் ஏற்படுவது சாதாரணமான சூழலாகி உள்ளது. விபத்தின் போது தலைக்காயம் ஏற்பட்டால் மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டு தீர்வு காண இயலாத நிலையில் அவர்களது குடும்பம் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகிறது. காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் போவது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்வது போன்ற காரணங்களால் விபத்துகளில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகி வருகிறது. 

இதனை தவிர்க்க பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 20ம் தேதி ஆண்டுதோறும் உலக தலைக்காயம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. கரூர் அப்போலோ மருத்துவமனை சார்பில் முதன்மை மருத்துவர் ஸ்ரீதர் தலைமையில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர மோட்டார் வாகனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் அப்போலோ மருத்துவமனை மூளை & நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் தமிழ் ஆனந்த் வரவேற்றார். பேரணியை கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். பேரணி கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் இருந்து புறப்பட்டு கோவை சாலை வழியாக அப்போலோ மருத்துவமனையை சென்றடைந்தது.

தொடர்புடைய செய்தி