கரூர் மாவட்டத்தில் 423. 10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு

69பார்த்தது
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடக்கு, வடமேற்கிலிருந்து தமிழகம் நோக்கி வீசும் வெப்ப காற்று காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஏற்கனவே செய்து இருந்தது.

கரூர் மாவட்டத்தில், நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் சில பகுதிகளில் கன மழையும், பல பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் கரூரில் 8. 40 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 33 மில்லி மீட்டர் அணைப்பாளையத்தில் 25. 00 மில்லி மீட்டர் க. பரமத்தியில் 28. 00 மில்லி மீட்டர், குளித்தலையில் 22. 40 மில்லி மீட்டர், தோகை மலையில் 55 மில்லி மீட்டர் கிருஷ்ணராயபுரத்தில் 60. 00மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக மாயனூரில் 82. 40 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 58. 60 மில்லி மீட்டர், கடவூரில் 10- மில்லி மீட்டர் பாலவிடுதியில் 8. 30 மில்லி மீட்டர் மகிழம்பட்டியில் 32. 00 மில்லி மீட்டர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 423. 10 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. மேலும், இதனுடைய சராசரி அளவு 35. 26 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி