தமிழக உள் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் தொடர்ந்து 4, 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. நேற்று(செப்.28) இரவு கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது.
மழை பெய்த நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தோகைமலையில் 27.20 மில்லி மீட்டர், குளித்தலையில் 9.20 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 2 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 38.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.