கரூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் சாராத அமைப்புகள், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்த இடங்கள் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தை, பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் காவல் துணை கண்காணிப்பாளர், அரவக்குறிச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர், கரூர், மன்மங்கலம், அரவக்குறிச்சி, புகலூர் வட்டாட்சியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.