கரூர் அருகே புலியூர் பகுதியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு பைக்கில் வீடு திரும்பிய மாணவன் மீது சாலையோர புளியமரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கடந்த 27ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன் தென்னரசு (16), கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.