கரூர்-நடந்து சென்றவர்மீது வேகமாக வந்த பேருந்து மோதி விபத்து.

81பார்த்தது
கரூர் பேருந்து நிலையத்தில் நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த பேருந்து மோதி விபத்து.


கரூர் சின்னாண்டாங் கோயில் பெரியசாமி நகரை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி சரோஜா வயது 36.

இவன் மே ஒன்பதாம் தேதி காலை 9. 30 மணி அளவில் கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

பேருந்து நிலையத்தில் தான் ஊருக்கு செல்ல இருந்த பேருந்தை தேடி நடந்து சென்றார்.

அப்போது, கரூர் , ஆறு ரோடு அருகே தாளப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி வயது 45 என்பவர் வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து, நடந்து சென்ற சரோஜா மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இதில் பலத்த காயமடைந்த சரோஜாவை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சரோஜா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் பேருந்தை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி