கரூர்-புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

85பார்த்தது
கரூரில் அனைத்திந்திய சிவில் இன்ஜினியரிங் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் விடுதி கூட்ட அரங்கில் அனைத்திந்திய சிவில் இன்ஜினியரிங் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டர்கள் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.

2025- 26 ஆம் ஆண்டுக்கான பணியாளர்கள் குழு, பொறியாளர் ஏ. ராமசாமி தலைவராக ஏற்று அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பில்டர் அசோசியேஷன் ஆப் இந்தியா மாநில ரியல் எஸ்டேட் கமிட்டி தலைவர் செல்வராஜ் அனைவருக்கும் பொறுப்புகளை பகிர்ந்து அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 2023- 25 ஆம் ஆண்டுக்கான தலைவர்
ஆர். ராமசாமி, முன்னாள் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய கமிட்டியின் தலைவராக
எ ராமசாமி, துணை தலைவராக ரவிக்குமார், செயலாளராக அருண்குமார், பொருளாளராக இந்திரமூர்த்தி, இணைச் செயலாளராக தேவராஜ், பொதுக்குழு உறுப்பினர்
ஆர் ராமசாமி, பாஸ்கரன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்ய செய்து வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் செயலாளர் நன்றி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி