ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த தற்போதைய கரூர் மாவட்டம் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் கரூர் மாவட்டம் என தனியாக பிரித்து தமிழக அரசு அறிவிப்பு செய்தது. கரூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு இன்றுடன்(செப்.30) 29 ஆண்டுகள் முடிந்து 30 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாகவும் , கரூர் மக்களிடையே கரூர் மாவட்டம் துவங்கிய நிகழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கரூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவ - மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது.