கரூர் ஆட்சியர் கூட்டரங்கில், அரசு மானியத்துடன் தொழில் கடன் வழங்கும் முகாமில், 1062 பயனாளிகளுக்கு ரூ. 107. 28 கோடி வங்கி கடனுதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத்துறைகளின் மூலம், செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயனாளிகளின் மேன்மைக்காக, கடன் மேளா மூலம் வங்கி கடனுதவிக்காண காசோலைகள் மற்றும் ஆணைகள் ஆட்சியர் கூட்டரங்கில் வழங்கப்பட்டது.
மாவட்ட தொழில் மைய அலுவலகத்துடன் இணைந்து மகளிர் திட்டம், வேளாண்துறை, வேளாண் விற்பனை துறை. கால்நடைதுறை, கைத்தறிதுறை, வாழ்ந்துகாட்டுவோம் திட்டம், கதர் கிராம தொழில் ஆணையம், கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ & ஆதிதிராவிடர் நலத் துறைகளின் சார்பாக அச்சு உற்பத்தி செய்யும் நிறுவனம் தொடங்குவதற்கும், ஜவுளி கடைகள், மளிகை கடைகள், புத்தகம் நிலையம், அரிசி ஆலை, கனரக வாகனம் வாடகைக்கு விடுவதற்கும் & தையல் நிலையம் போன்ற பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்காக தொழில் கடன் உதவி 1062 பயனாளிகளுக்கு ரூ. 107. 28 கோடி மதிப்பீட்டில் திட்ட கடனுதவிக்கான ஆணைகள் & காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர். வசந்தகுமார், சி. ஐ. ஐ தலைவர் செந்தில் சங்கர், வங்கி பிரதிநிதிகள் & அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.