காளியப்பனூர்- மயானம் அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளியப்பனூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் மார்ச் 27ஆம் தேதி காலை 9 மணி அளவில், காளியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அருகில் உள்ள மயானம் அருகே சட்டவிரோத மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது.
இந்த விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், நத்தம், பாலகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி வயது 38 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 28 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.