முடக்கு சாலையில் டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் , வடக்கு முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 33.
இவர் பிப்ரவரி 15ஆம் தேதி காலை 10 மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் மணவாசி முடக்கு சாலை அருகே சென்றபோது,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தொட்டப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் வயது 46 என்பவர் வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து, முத்துக்குமார் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது்.
இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்த முத்துக்குமாருக்கு தலையில் பலத்த காயம்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் அறிந்த முத்துக்குமாரின் மனைவி கன்னியம்மாள் வயது 23 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அரசு பேருந்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.