கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; நலத்திட்டம் வழங்கிய ஆட்சியர்

53பார்த்தது
கரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஆட்சியர் தங்கவேல். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குனர் சிவானந்தம், கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் தொடர்பான 47 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். கூட்டத்தின் நிறைவில் பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பயனாளிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி