தெற்கு காந்திகிராமத்தில் வீட்டை விற்பனை செய்ததால் குடும்ப தகராறு. தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்.
கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 79 இவரது மனைவி ராசாத்தி வயது 57.
இவர்களுக்கு சொந்தமான வீட்டை அண்மையில் விற்பனை செய்து உள்ளனர்.
இந்த விற்பனை தொடர்பாக ராமலிங்கம் ராசாத்தி தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரேக் ஏற்பட்ட ராசாத்தி பிப்ரவரி 19ஆம் தேதி காலை 6 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இச்சம்பவம் அறிந்த ராமலிங்கம் தனது மனைவியை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு ராசாத்தி பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ராமலிங்கம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த ராசாத்தி உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.