கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவடியான் கோவில் தெருவில் உள்ள கண்ணரா சந்து பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மனைவி தனமணி வயது 75.
இவருக்கு வயோதிகம் காரணமாக முழங்கால் வலி அண்மைக்காலமாக அதிகமாக இருந்தது.
இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டார்.
இதனால் விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து வந்த தனமணி மே 29ஆம் தேதி இரவு 7 மணி அளவில் , எலி விசம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த அவரது மகன் ரவி வயது 55 என்பவர் தனது தாயாரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த தனமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ரவி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , உயிரிழந்த தனமனியின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து , இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல்துறையினர்.